#Salem | #DrunkenMan | #PoliceStation | #ThanthiTV Salem Drunken Man | மதுபாட்டிலை உடைத்து விட்டதாக `குடிமகன்' போராட்டம் - ஸ்டேஷனை முற்றுகையிட்ட போதை ஆசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில், போலீஸ்காரர் தனது மதுபாட்டிலை உடைத்துவிட்டதாகக் கூறி, போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. ஓமலூரில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் கிளப்பில் கூடுதல் விலைக்கு மது வாங்கி வந்ததாகக் கண்ணன் என்ற நபர் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர் தனது மதுபாட்டிலைப் பிடுங்கி உடைத்துவிட்டதாகக் கூறி, காவல் நிலையம் முன்பு அவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தான் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எனக் கூறிக்கொண்டு, பாட்டிலுக்கான பணத்தை போலீசார்தான் தர வேண்டும் என அவர் அடம் பிடித்ததால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.