தமிழ்நாடு

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. தினத்தந்தி கல்வி நிதியை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசிய ஆட்சியர் ரோகிணி, மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான், தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்