சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் வழங்காததால், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்ற அமினா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். இழப்பீட்டு தொகை வழங்க, ஆட்சியர் ஒரு மாதம் அவகாசம் கேட்டதையடுத்து ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது.