சேலம் மணியனூர் அருகே உள்ள குமரகவுண்டர் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரீத்தி என்பவரை, சிலர் கயிற்றால் தாக்கும் காட்சிகள் வெளியாகின. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்த போது, 30 லிட்டர் டீசலை பிரீத்தி திருடி விட்டதாகவும் அதன் காரணமாக மினி ஆட்டோ உரிமையாளர் ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரி, விஜய் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.