தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டம்: உயர்நீதிமன்ற தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தந்தி டிவி

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணை, நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைகால சிறப்பு அமர்வில் இன்று, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 8 வழி சாலைத் திட்டம் குறித்து மத்திய மாநில அரசுகளின் முடிவுகள் இருக்கும் என்பதால் வழக்கு விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை