தமிழ்நாடு

சேலம் அருகே வாகனம் கவிழ்ந்து 40 பேர் படுகாயம் - விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதி

சேலம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த 40 பேர் தங்கள் உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றனர். அப்போது வேப்பநத்தம் அருகே வாகனம் வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு நேரத்தில் விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும், 40 பேர் வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்