Salem Bus Fire | பேருந்தில் திடீரென வெடித்த டீசல் டேங்க் - `தீப்பிழம்பாக’ மாறிய பயங்கர காட்சி.. சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்த சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... சேலத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் காமராஜ் நகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் வெடித்து தீ வெளியேறியது. உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சரவணன், பயணிகளை பாதுகாப்பாக கீழிறக்கினார். டீசல் சாலையில் கொட்டிய நிலையில், அருகிலிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.