சேலத்தில் முதல்முறையாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் மற்றும் சேலம் வாசிப்போர் இயக்கம் இணைந்து நடத்தும் முதலாவது சேலம் புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியுள்ளது. 13 நாட்கள் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.