தமிழ்நாடு

பழனியில் பூசாரியை குத்திக்கொலை செய்த சாமியார்

பழனியில் முன்விரோதம் காரணமாக, சாமியார் ஒருவர் கோவில் பூசாரியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பழனியில் இடும்பன் கோவில் அருகே வில்வக்குடில் என்ற கோவில் உள்ளது. இதை மலர்கனி ராஜா என்ற பூசாரி நிர்வாகம் செய்து வந்தார். இந்த கோவிலுக்கு அருகே உள்ள செல்லத்துரை என்பவரது சமாதியில், தர்மராஜ் என்ற சாமியார் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை மனைவி விஜயாவுடன், மலர்கனி ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த தர்மராஜ் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். மலர்கனி ராஜா மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார், தர்மராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு