எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் சைதை துரைசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.