தமிழ்நாடு

"குறுக்கு வழியில் பணியில் சேருவது வேதனைக்குரியது" - சகாயம் ஐஏஎஸ்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஊழல் தான் முதல் காரணம் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டி உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்கள் தமிழோடு நின்றுவிடாமல் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார். இளைஞர்கள் குறுக்கு வழியில் அரசு பணியில் சேர வேண்டும் என்று நினைத்து முறைகேட்டில் ஈடுபடுவது என்பது வேதனைக்குரியது என்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். குறிப்பிட்டார்.

==

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்