Ramanathapuram | பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.. | வெள்ளக்காடாய் மாறிய முக்கிய சாலை #ramanathapuram #waterpipe #damage #NH #thanthitv உச்சிப்புளி - காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு சாலையில் வீணாக வெளியேறி வரும் பல லட்சம் லிட்டர் குடிநீர்... குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் தீவிரம் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ராமேஸ்வரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் காட்டாற்று வெள்ளம் போல் குடிநீர் சாலையில் வெளியேறி வருகிறது. தகவல் அறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்... இச்சம்பவத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் தற்காலிக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.