தமிழ்நாடு

பெரு நகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகள்; நவீன முறையில் அகற்ற வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை

நாடு முழுவதும் பெருநகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

நாடு முழுவதும் பெருநகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளின் காரணமாக பெருமளவு மாசு ஏற்படுவதாக சுட்டிக் காட்டினார். பெரு நகரங்களில், குப்பைகள் சேர்ந்து இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம் எனவும், அதனை அகற்ற பயோ மைனிங் முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கழிவுகள் இல்லாத நிலையை விரைவில் அடைவோம் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை