தமிழ்நாடு

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய பேச்சுவார்த்தை : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக 37 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. இது தொடர்பாகவும், அரசு ரப்பர் கழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தொழிற்சங்கங்கள் போராடி வந்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி