தமிழ்நாடு

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது...

செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தில் செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததாக சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் குடோன்களில் அனுமதியின்றி சிறிய ரக பட்டாசு மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் வீடுகளில் மற்றும் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் நடத்திய சோதனையில் அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாசு தயாரித்த பக்ரிநாத்தை கைது செய்த போலீசார், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை