தமிழ்நாடு

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது...

செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தில் செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததாக சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் குடோன்களில் அனுமதியின்றி சிறிய ரக பட்டாசு மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் வீடுகளில் மற்றும் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் நடத்திய சோதனையில் அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாசு தயாரித்த பக்ரிநாத்தை கைது செய்த போலீசார், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி