தமிழ்நாடு

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது...

செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தில் செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததாக சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் குடோன்களில் அனுமதியின்றி சிறிய ரக பட்டாசு மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் வீடுகளில் மற்றும் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் நடத்திய சோதனையில் அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாசு தயாரித்த பக்ரிநாத்தை கைது செய்த போலீசார், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி