தமிழ்நாடு

சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மதார், மதுரையை சேர்ந்த ஷேக் மதார் ஆகியோரின் அட்டை பெட்டிகளில் சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, சுறா மீன் துடுப்பு மற்றும் வால்கள் ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரிடமும் இருந்து 64 கிலோ எடையிலான சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்