தமிழ்நாடு

சென்னை : ரூ32 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் பாகங்கள் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தின் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மதார், மதுரையை சேர்ந்த ஷேக் மதார் ஆகியோரின் அட்டை பெட்டிகளில் சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, சுறா மீன் துடுப்பு மற்றும் வால்கள் ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரிடமும் இருந்து 64 கிலோ எடையிலான சுறா மீனின் துடுப்பு மற்றும் வால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 32 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"