தமிழ்நாடு

வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் : உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை

வீடு கட்ட அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி
வீடு கட்ட அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் உதவி பொறியாளராக இருந்த ராமலிங்கம், கடந்த 2012-ல் லோகநாதன் என்பவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில், லஞ்சம் வாங்கிய போது ராமலிங்கம் கைது செய்யப்பட்டார். திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், ராமலிங்கத்திற்கு 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்