தமிழ்நாடு

வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை...

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாண்டியன் வீட்டு கதவை பலமாக தட்டியுள்ளது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பாண்டியன் கதவை திறக்காமல் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த அந்த மர்ம கும்பல், பாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது. குடும்பத்தினர் கண்முன்னே பாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் முக்கிய குற்றவாளியாகவும், பல கொலை மிரட்டல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு