24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேந்திரன் என்ற சேராவை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த சேரா மீது 2 கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன. 2001-ம் ஆண்டு முதல் ரவுடி சேரா தலைமறைவான நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்த சேரா, கஞ்சா விற்பனை மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. சேரா மீது எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.