தமிழ்நாடு

போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், தனது பிறந்த நாளன்று அவர் அரிவாளால் கேக் வெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரவுடி பினு. நேற்றையதினம் சிந்தாதரிபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற காரில் ரவுடி பினுவை கண்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் பல இடங்களில் ரவுடிகளின் கைது நடவடிக்கை தொடர்ந்து வரும்நிலையில், கைதில் இருந்து தப்பிப்பதற்காக பினு தன் பெயரை போலீசாரிடம் மாற்றி கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காரில் இருந்த அனைவரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை