கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில், மாதா சுரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடியை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. முத்து பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.