வாலாஜாபாத்தில் இருந்து தென்னேரி செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த 2 பேர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம், ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்ததை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த 125 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.