தமிழ்நாடு

தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஆலோசனை - இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் சிக்கல்களை களைய இருமாநில முதலமைச்சர்களும் கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரு மாநில முதன்மை செயலாளர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு