தமிழ்நாடு

தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஆலோசனை - இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் சிக்கல்களை களைய இருமாநில முதலமைச்சர்களும் கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரு மாநில முதன்மை செயலாளர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு