தமிழ்நாடு

தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஆலோசனை - இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் சிக்கல்களை களைய இருமாநில முதலமைச்சர்களும் கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரு மாநில முதன்மை செயலாளர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு