நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.
ரிவால்டோ யானை, மாவநல்லா, பொக்காபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 வருடங்களாக சுற்றி வந்ததோடு, அப்பகுதி மக்களுடன் யானை சகஜமாக பழகி வந்தது.
இந்த யானைக்கு செல்லமாக ரிவால்டோ என பெயர் வைத்து அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனை காரணமாக இந்த யானை உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.