தமிழ்நாடு

ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப் ரத்தினகுமார் சொத்து தகராறு காரணமாக, கொலை செய்யப்பட் வழக்கு கள்ளக்குறிச்சி கூடுதல் 3-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செல்லமுத்துக்குமாரி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அறிவழகன், செந்தில் , நித்திய ராஜ் இளையராஜா, சரஸ்வதி, ஆனந்த் ஆகிய ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர​ஸ்வதிக்கு, நான்காயிரம் ரூபாயும், மற்ற 5 பேருக்கு தலா ஆறாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை