* சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆயிரத்து 994 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
* பதவி இடங்களின் எண்ணிக்கை குறைவே இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மையங்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.