தமிழ்நாடு

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பொதுப்பணித்துறையின் நீர்வள தலைமை பொறியாளர் உட்பட, 4 பேரை சஸ்பெண்ட் செய்து, கடந்த ஜனவரி மாதம், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை பொறியாளர் அசோகனின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து, தமிழக அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, அசோகன் நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ரவீந்திரபாபு, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ