தமிழ்நாடு

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பொதுப்பணித்துறையின் நீர்வள தலைமை பொறியாளர் உட்பட, 4 பேரை சஸ்பெண்ட் செய்து, கடந்த ஜனவரி மாதம், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை பொறியாளர் அசோகனின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து, தமிழக அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, அசோகன் நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ரவீந்திரபாபு, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை