சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழமையான மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதி அளித்ததுடன், புதிய மரக்கன்றுகளை நடவும், 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.