தமிழ்நாடு

மலையாளத்தில் முன்பதிவு படிவம் : தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு

திருச்சி ரயில் நிலையதத்தில், முன்பதிவு விண்ணப்ப படிவத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மலையாள மொழியும் இடம் பெற்றிருப்பது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஆங்கிலம், இந்தி உடன் தமிழும் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், திருச்சி ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட முன்பதிவு படிவத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மலையாள மொழியும் இடம்பெற்றிருந்தது. இதனால் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறினர். இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கேரள மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய முன்பதிவு படிவங்கள் தமிழகத்திற்கு மாற்றி அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தமிழ் ஆர்வலர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்