தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு முனையமாக அறிவிக்க கோரிக்கை - விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, தகவமைப்புகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், விமான போக்குவரத்து துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, தகவமைப்புகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், விமான போக்குவரத்து துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியா அளவில் மதுரை 44வது இடத்தில் வளர்ச்சி பெற்ற நகரமாக வளர்ந்து வருவதாகவும், பன்னாட்டு விமான நிலையமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மீனாட்சி அம்மன் கோயில், உயர் நீதிமன்ற கிளை, குமரி, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கோரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மத்திய விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு