தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலில் பள்ளி மாணவர்கள் குடியரசு தின ஒத்திகை

சேலத்தில் கொளுத்தும் வெயிலில் குடியரசு தின ஒத்திகையில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தந்தி டிவி

குடியரசு, சுதந்திர தின கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை காலை நேரங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின ஒத்திகை தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒத்திகையில் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலை தாங்காத ஆசிரியைகள் தங்கள் உடையால் தங்கள் தலையை மூடிக் கொண்டனர். ஆனால், சுடும் வெயிலில், வெறும் காலில் நிற்க முடியாத நிலையிலும் மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டடனர்.

மைதானத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். வெயிலையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை மாணவ, மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்துனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்