மதுக்கடையை அகற்ற வேண்டும் - பஸ்ஸை மறித்து போராட்டத்தில் குதித்த மக்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அழகாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு அரசு பேருந்துகளை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்...