தமிழ்நாடு

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் 2020ற்குள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என நிதி ஆதியோக் அமைப்பின் எச்சரிக்கையை மேற்கொள் காட்டி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்களையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தூர்வார இயந்திரங்களை வாங்கியது போல அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தூர்வாரும் பணிக்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்