தமிழ்நாடு

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அரசியல் சட்டத்திற்கு புறம்பான கருத்தை கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வரைவு அறிக்கையை மத்தியஅரசு தயார் செய்தது தவறு என்றும் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல் ஜூன் மாதத்திற்குள் கர்நாடகம், 9 புள்ளி 2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம்தான் எதுவும் நடைபெற வேண்டும் என்றார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி