தமிழ்நாடு

சஸ்பெண்ட்-ல் இருந்து பணி ஓய்வு...2008-ல் RDO செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தீர்ப்பு

தந்தி டிவி

கடலூரில் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆன்டு சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய குழந்தைவேல் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குழந்தைவேல் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலேயே பணி ஓய்வு பெற்ற குழந்தைவேலுக்கு தற்போது 72 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்