தமிழ்நாடு

சஸ்பெண்ட்-ல் இருந்து பணி ஓய்வு...2008-ல் RDO செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தீர்ப்பு

தந்தி டிவி

கடலூரில் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆன்டு சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய குழந்தைவேல் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குழந்தைவேல் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலேயே பணி ஓய்வு பெற்ற குழந்தைவேலுக்கு தற்போது 72 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?