ஸ்ரீபெரும்புதூர் அருகே கப்பாங்கோட்டூர் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒரு கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர். ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.