ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். கோவில் கட்டும் பணிக்காக இன்று போடப்பட்ட பூமி பூஜையில் கட்சி வேறுபாட்டை கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர்.
அருந்ததியர் இனமக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.