தமிழ்நாடு

Ranipettai | இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

தந்தி டிவி

பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் வழுக்கி விழுந்து 8 வயது சிறுவன் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் கல்பலாம்பட்டு கிராமத்தில் 8 வயதான சிறுவன், தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து உயிரிழந்தார். உமாபதி என்பவரது மகன் சந்தோஷ் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பள்ளி தோழன் கதிரவனுடன் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக தெரிகிறது. அங்கே தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன் சந்தோஷ், பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு