தமிழ்நாடு

மலைக்கோயிலில் மயங்கி விழுந்த பக்தர் படியில் பிரிந்த உயிர் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் படிகளில் ஏறிச் சென்ற பெங்களூர் சேர்ந்த பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் ஆயிரத்து 305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குடும்பத்துடன் சென்றார். பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்த முத்துக்குமார், படிகளில் ஏறிச் சென்றார். ஆயிரத்து 200 வது படியை கடந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே முத்துக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை