தமிழ்நாடு

மலைக்கோயிலில் மயங்கி விழுந்த பக்தர் படியில் பிரிந்த உயிர் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் படிகளில் ஏறிச் சென்ற பெங்களூர் சேர்ந்த பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் ஆயிரத்து 305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குடும்பத்துடன் சென்றார். பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்த முத்துக்குமார், படிகளில் ஏறிச் சென்றார். ஆயிரத்து 200 வது படியை கடந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே முத்துக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்