தமிழ்நாடு

பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு : விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு

பாலத்தில் பொருத்தப்பட்ட இரும்பு தூண்கள் அகற்றம்விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன. பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் விரிசல் ஏற்பட்டது.இதையடுத்து ராமேஸ்வரத்திற்கு வர வேண்டிய ரயில்கள் அனைத்தும் மண்டபத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கிருந்து பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் ரயில்வே ஊழியர்கள் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர், அதன்பின் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் இல்லாத ரெயில்கள் தண்ணீர் நிரப்பவும் சுத்தம் செய்யவும் பாம்பன் பாலத்தில் சென்றன. ரயில்வே அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்துவிரைவில் ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தை தாங்கி நிற்பதற்காக பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தூண்கள் அகற்றப்பட்டன. இதனால் பாம்பன் பாலம் வழியாக விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி