தமிழ்நாடு

ராமேஸ்வரம் : குவித்துவைத்த மீன்கள் அழுகுவதால் நகரை சூழ்ந்த துர்நாற்றம்

இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

தந்தி டிவி

இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் சென்ற மீனவர்கள், தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி டன் கணக்கில் மத்தி ரக மீன்களை பிடித்துள்ளனர். அவற்றை ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மீன்கள் அழுகிய நிலையில் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனிடையே, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்