தமிழ்நாடு

ராமேஸ்வரம் : குவித்துவைத்த மீன்கள் அழுகுவதால் நகரை சூழ்ந்த துர்நாற்றம்

இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

தந்தி டிவி

இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களால், ராமேஸ்வரம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் சென்ற மீனவர்கள், தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி டன் கணக்கில் மத்தி ரக மீன்களை பிடித்துள்ளனர். அவற்றை ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மீன்கள் அழுகிய நிலையில் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனிடையே, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி