தமிழ்நாடு

தொடர்ந்து 8வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் - வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரிக்கை

தொடர்ந்து எட்டாவது நாளாக வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
தொடர்ந்து எட்டாவது நாளாக வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலையின் காரணமாக மீன்பிடி படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சார்பு தொழிலாளர்களும் வேலையை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் துறைமுகத்தில் கடந்த 8 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 16 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு