தமிழ்நாடு

19 தீவிரவாதிகள் ஊடுருவல் என தகவல் - விடுதிகளில் போலீசார் விடிய விடிய சோதனை

ராமேஸ்வரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலாலும், அங்குள்ள விடுதிகளில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலாலும், அங்குள்ள விடுதிகளில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாம்பனில், சாலை மற்றும் ரயில்வே பாலங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில், விடுதி, உணவகங்களிலும் விடிய விடிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முழு முகவரி மற்றும் ஆதாரம் இல்லாமல் எந்த நபருக்கும் அறைகள் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்திய போலீசார், தனி நபருக்கு அறை வழங்கவே கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் ராமேஸ்வரம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி