கொரோனாவுக்கு பிறகு தொலைதூர ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்துக்கும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. வழக்கம் போல், பாம்பன் பாலம் வழியாக மண்டபம் நோக்கி ரயில் சென்ற நிலையில், பாலத்தின் மீது மிதவை கிரேன் மோதியது. கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக ஏற்பட்ட இந்த நிலையால், 210 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட ரயில், பாலத்தின் நடுவே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின், மீண்டும் ராமேஸ்வரத்துக்கு ரயில் சென்றது. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்தனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மிதவை கிரேனை போராடி மீட்டு வருகின்றனர்.