ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.