தமிழ்நாடு

"பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு" - மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என புகார்

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்

தந்தி டிவி

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆர்எஸ் மடை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி கீர்த்திகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நேற்று மாலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்த நிலையில், தாயும்,சேயும் உயிரிழந்தனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதன் பின் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ