தமிழ்நாடு

பெண் எஸ்ஐ மீது அத்துமீறியதாக கூறி பாஜக நிர்வாகி நள்ளிரவு கைது | Ramanathapuram | BJP Executive

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் இருந்து மகளிர் அணி சார்பில் கேணிக்கரை பகுதியில் இருந்து சென்ற பாஜகவினரை போலீசார் வழிமறித்து தடுத்து கைது செய்தனர். இதனால், பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக மாவட்ட ஆன்மீக பிரிவு செயலாளர் சண்முகநாதன், பெண் சார்பு ஆய்வாளர் ஒருவர் மீது கை வைத்து தள்ளியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நள்ளிரவு சண்முகநாதனை கைது செய்தனர். ஆனால், போலீசார் இழுத்ததாலேயே சார்பு ஆய்வாளர் மீது அவரது கைப்பட்டுள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தெரிவித்துள்ளார். போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்