தமிழ்நாடு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான நிஜாம் அலிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய நிஜாம் அலிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம்.

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதை தடுத்த திருபுவனத்தை சேர்ந்த பா.ம.க முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நிஜாம் அலி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நிஜாம் அலி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் நிஜாம் அலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜூன் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்