தமிழ்நாடு

ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு போலீசுக்கு மாற்றம்

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேர், பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, ஷர்புதீன், உள்ளிட்ட 10 பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கானது கடந்த மாதம் 25 ஆம் தேதி தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு முதல்முறையாக விசாரணைக்கு வந்ததையொட்டி திருச்சி சிறையில் இருந்த10 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 20ஆம் தேதி மீண்டும் 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 10 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி