தமிழ்நாடு

நிறம் மாறிய மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணை நீர் நீல நிறமாக மாறி கடுமையாக துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாகவும் காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்துவிடுவதே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் மாதிரியை ஆய்வு செய்து அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரியில் கர்நாடகம் கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாக தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்