தமிழ்நாடு

நிறம் மாறிய மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணை நீர் நீல நிறமாக மாறி கடுமையாக துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாகவும் காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்துவிடுவதே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் மாதிரியை ஆய்வு செய்து அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரியில் கர்நாடகம் கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாக தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்